Saturday, December 17, 2011

ரூ.615 கோடிக்கு ஏலம் போன எலிசபெத் டெய்லரின் நகைகள்

ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை கட்டிப் போட்டவர் எலிசபெத் டெய்லர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடந்த 1991ம் ஆண்டில் தி எலிசபெத் டெய்லர் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
79 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் இறந்தார். இந்நிலையில் டெய்லரின் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் ஏல நிறுவனம் சார்பில் அவரது புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமான 269 வகையான நகைகள் ஏலம் விடப்பட்டன.
இவை அனைத்தும் ரூ.615 கோடிக்கு(இந்திய ரூபாய்) விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.150 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கணிப்பைப் போல் 6 மடங்கு அதிக தொகையை திரட்டி உள்ளது.
இதற்கு முன்பு 1987ம் ஆண்டில் விண்ட்சர் என்ற மன்னனின் மனைவி நகைகள் ரூ.265 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்ச தொகையாக இருந்தது.
இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக முத்து நெக்லஸ் மட்டும் ரூ.63 கோடியை ஈட்டியுள்ளது. இதுபோல் டெய்லரின் 2வது கணவரும், நடிகருமான ரிச்சர்டு புர்டன் பரிசாக தந்த 33 காரட் வைர மோதிரம் ரூ.46 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment