Wednesday, December 21, 2011

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஆசிய-பசிபிக் பகுதியில் சீனா தனது இராணுவத்தை  பலப்படுத்தியுள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் முறையாக நேற்று(20.12.2011) பேச்சுவார்த்தை நடத்தின.
சீனாவுக்கும், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே கடல் எல்லை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவத்தை பலப்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று வாஷிங்டனில் நடைபெற்றது.
இதில் அமெரிக்கா சார்பில் வெளிவிவகார இணை அமைச்சர்கள் ராபர்ட் பிளேக் மற்றும் குர்ட் கேம்ப்பெல், இந்தியா சார்பில் இணை செயலாளர்கள் ஜவேத் அஷ்ரப், கவுதம் பம்ப்வாலே, ஜப்பான் சார்பில் வெளிவிவகார அமைச்சர் கொய்ச்சிரோ கெம்பா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் இவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளும் இணைந்து ஆசிய-பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளின் நலன் பற்றி விவாதிக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடக்கமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. ஆசிய-பசிபிக் கடல் பகுதியில் சீனா தனது இராணுவத்தை பலப்படுத்தி இருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment