Wednesday, December 21, 2011

ஜேர்மன் ஜனாதிபதி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு

ஜேர்மனியின் ஜனாதிபதியான கிறிஸ்ட்டியன் உல்ப் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்துவதற்கு கார்ஸ்ட்டன் மேஸ்க்மெயர் என்ற பெரும் பணக்காரர் 43000 யூரோக்களைச் செலவழித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே வீட்டுக்கடனால் தன் பழைய குடும்ப நண்பரான எகான் கீர்கென்ஸின் மனைவியிடமிருந்து 500,000 யூரோ வாங்கியதை இவர் மறைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு கடந்த 2008ஆம் ஆண்டில் உல்ப் எழுதிய “Better tell the Truth” என்ற புத்தகம் தொடர்பானது.
விடுதலைக் குடியரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எர்வின் லாட்டர் கூறுகையில், தன் நேர்மையையும், பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக உல்ப் ஜனாதிபதி பதிவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜனாதிபதியும், பிரதமரும் நல்ல புரிதலோடு கடமையாற்றுவதாகக் குறிப்பிட்டார்.
பொதுமக்களிடம் ARD தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் 70 சதவிகிதம் பேர் உல்ப் பதவி விலக வேண்டாம் என்றனர். ஆனால் 51 சதவிகிதம் பேர் மட்டுமே இவர் நம்பகமானவர் என்றனர்.

No comments:

Post a Comment