Wednesday, December 21, 2011

வட கொரியாவை நவீன உலகத்திற்கு மீட்டு கொண்டு வர வேண்டும்: கனடா பிரதமர்

வட கொரியத் தலைவரான கிம் ஜாங்கின் மரணத்தை அடுத்து, அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அந்நாட்டை நவீன உலகத்திற்கு மீட்டு கொண்டுவர வேண்டும் என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்தார்.
கிம் ஜாங்(69) மாரடைப்பால் காலமானார். இவர் வட கொரியாவின் முடிசூடா மன்னனாக 17 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வட கொரியாவின் படை பலத்தை குறிப்பாக அணு ஆயுத பலத்தைப் அதிகப்படுத்தினார்.
இவருடைய திடீர் மரணம் இந்நாட்டின் வரலாற்றில் அவலம் நிறைந்த அத்தியாயம் ஆகும். புதிய வாய்ப்புகளுக்கு ஏற்றதொரு காலம் தற்போது தான் அமைந்துள்ளது. இதனைத் தவறவிட்டால் மக்களின் வாழ்க்கை இன்னும் மோசமாகிவிடும் என்று ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் புதிய தலைமை உலக மக்களுடன் வட கொரியாவை நட்பு கொள்ள வழிவகுக்க வேண்டும் என்றார். இதுவரை தெற்கே உள்ள தன் சகோதர நாட்டிடம் மட்டுமே பகைமை பாராட்டிய வட கொரியா, உலக நாடுகளிடம் இருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஜான் பெயர்டு கூறுகையில், இனி வட கொரியா தன் வழிகளை மாற்றியமைத்து அந்நாட்டு மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்ற முயல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment