Saturday, December 17, 2011

எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்

பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். இவர் தனது 79வது வயதில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார்.
இவர் ஆடைகள் மற்றும் நகைகள் அணிவதில் ஆர்வம் கொண்டவர். எனவே இவர் விதவிதமான நகைகள் மற்றும் ஆடைகளை சேகரித்து வைத்திருந்தார்.
அவை நியூயோர்க்கில் உள்ள கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் என்ற ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்படவுள்ளது.
அதற்காக எலிசபெத் டெய்லரின் 400 ஆடைகள், 269 விதமான நகைகள் மற்றும் அவர் வாங்கிய விருதுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் அவரது நண்பரான மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பரிசாக வழங்கிய வைரம் மற்றும் நீலக்கல்லால் ஆன மோதிரமும் அடங்கும்.
அந்த மோதிரத்தை ஏலத்தில் எடுக்க ஏற்கனவே ஒருவர் 3 கோடி ரூபாயை(இந்திய ரூபாய்) முன்பணமாக வழங்கி உள்ளார்.
ஏலம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. நகைகள் மற்றும் உடைகள் மொத்தம் ரூ.150 கோடிக்கு(இந்திய ரூபாய்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஏல மையத்தின் தலைவர் மார்க் போர்டர் கூறுகையில், இவை அனைத்தும் நடிகை எலிசபெத் டெய்லர் தனிப்பட்ட முறையில் தெரிவு செய்த நகைகளாகும். 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டவையாகும். அவற்றை அவர் மிகவும் விரும்பி தெரிவு செய்து சேகரித்து வைத்து இருந்தார் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment