Wednesday, December 21, 2011

ஆளில்லா விமானத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது அமெரிக்கா

அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது.
உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment